தொடர்புடைய செய்திகள்
- பன்றி இதயம் பொருத்தப்பட்டவருக்கு புதிய வைரஸ் தொற்று! – அமெரிக்காவில் அதிர்ச்சி!
- ஆக்கிரமித்த பகுதிகள் தனிநாடு, வெளியேறும் உக்ரைன் மக்கள்! – உக்ரைனில் என்ன நடக்கிறது?
- நான் இருந்திருந்தா ரஷ்யாவை ஆட்டியிருப்பேன்..! – அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்!
- தினமும் 10 ஆயிரம் டாலர்கள் அபராதம்! – ட்ரம்ப்புக்கு வந்த சோதனை!
- இப்படியே போனா மூன்றாம் உலகப்போர்தான்..! – ரஷ்யா விடுத்த எச்சரிக்கை!
திடீரென உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் மனைவி! – உலக அரசியலில் பரபரப்பு!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அமெரிக்க அதிபரின் மனைவி திடீரென உக்ரைன் புறப்பட்டு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. உக்ரைனும் எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகியுள்ளனர். ஏராளமான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதுடன், தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.
ரஷ்யாவின் இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் பொதுமக்களை சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளார். உக்ரைன் போர் குறித்து பேசிய அவர் ”உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரவேண்டும். இந்த போரில் அமெரிக்கா என்றும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாய் நிற்கிறது” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
