தொடர்புடைய செய்திகள்
- பீர் குடிக்கும் போட்டியை அறிவித்த நபர் கைது
- மத்திய அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் - உயர்நீதிமன்றம் அதிரடி
- புதுக்கோட்டையில் பீர் குடிக்கும் போட்டி.. வாந்தி எடுத்தால் நீக்கம்.. நுழைவுக்கட்டணம் எவ்வளவு தெரியுமா?
- சச்சினை முந்திய கோலி… என் கப்பு என் காலு என போஸ் கொடுத்த மார்ஷ்! - 2023-ல் கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்த டாப் 10 நிகழ்வுகள்!
- அனிமல் 2 கண்டிப்பாக உருவாகும்… இயக்குனர் சந்தீப் ரெட்டி தகவல்!
மாடுகளுக்கு பீர் கொடுத்து வளர்க்கும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்.. புதிய பிசினஸ் தொடக்கம்..!
பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும் அவர் மாட்டு இறைச்சி தொழில் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
தங்கள் நிறுவனத்தின் சிறந்த மாட்டு இறைச்சியை உருவாக்குவதற்காக தங்கள் பண்ணையில் உள்ள மாடுகளுக்கு உலர் கொட்டைகள், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீர் ஆகிவற்றை கொடுத்து வளர்த்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய எல்லா பிசினஸ்களையும் காட்டிலும் இந்த பிசினஸ் சுவையான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் மாட்டு இறைச்சி உண்ணும் புகைப்படத்தையும் பதிவு செய்து பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் உரிமையாளரான மார்க் சுக்கர்பெர்க் திடீரென மாட்டிறைச்சி பிசினஸ் தொடங்கியுள்ளதை அடுத்து அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Edited by Siva
