தொடர்புடைய செய்திகள்
- 30 சதவீதம் போனஸ்… வேலை நேரத்தில் மாற்றம் – டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு?
- அடுத்த ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்கும் – கங்குலி நம்பிக்கை!
- எனக்கு உங்கள் படத்தைப் போட்டுக் காட்டினார்கள்… சரத்குமாரை பாராட்டிய சோனு சூட்!
- ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் … இரண்டாவது நாளாக போராட்டம்!
- இந்திய அணிக்கு விளையாடுவதை விட ஐபிஎல் முக்கியமா?? ரோஹித் ஷர்மாவை காய்ச்சி எடுக்கும் முன்னாள் வீரர்கள்!
கொரோனா இரண்டாவது அலை… இங்கிலாந்தில் மீண்டும் பொது முடக்கம்!
இங்கிலாந்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமாகியுள்ளதை அடுத்து ஒரு மாத கால பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சில நாடுகளில் கொரோனா பாதிப்புகள் ஓய்ந்தாலும் பல நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று இங்கிலாந்து.
தற்போது இங்கிலாந்தில் இரண்டாவது அலை கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதை அடுத்து மீண்டும் ஒரு மாத காலத்துக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் இன்றிலிருந்து டிசம்பர் 2ஆம் தேதி வரையிலான ஒருமாத கால பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
