1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 21 டிசம்பர் 2022 (09:24 IST)

சி.இ.ஓ பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் பதவி விலகுவேன்: எலான் மஸ்க்

Elon mUsk
ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் நான் அந்த பதவியில் இருந்து விலகுவேன் என பிரபல தொழிலதிபரும் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டுவிட்டர் என்ற நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பது அந்நிறுவனத்தின் சிஇஓ உள்பட பல முக்கிய அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து விட்டு தானே சிஇஓ பதவியை ஏற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் எலான் மஸ்க் சி.இ.ஓ பதவியில் இருந்து விலக வேண்டும் என 57 சதவீதம் பேர் வாக்களித்த நிலையில் இந்த பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் நான் இந்த பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva