1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2022 (17:51 IST)

சேவல் சண்டையின்போது தகராறு…20 பேர் சுட்டுக்கொலை

மெக்சிகோ நாட்டில் சேவல் சண்டையின் போது ஏற்பட்ட தகராறில் 20 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டிலுள்ள மேற்கு மா நிலமான  கைக்வோவாகனில் சேவல் சண்டை சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இ ந் நிலையில்,  சட்டத்திற்குப் புறம்பாக சேவல் சண்டை நடத்தப்பட்டது.அப்போது, இரு தரப்பினருக்கு இடையே மோதம் நடந்தது. 

சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  4பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.