1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (15:54 IST)

ஹிஜாப் அணிய தடை ...தேர்வை புறக்கணித்த மாணவிகள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில் பல மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வருவதால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு நேரம் என்பதால் ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல மாணவிகள் தேர்வு எழுதாமல் திரும்பி சென்று விட்டனர்

இந்த நிலையில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதி கேட்ட கண்காணிப்பாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பொதுத்தேர்வுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்  நேற்று சுமர் 20000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.