1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூலை 2019 (11:09 IST)

விமானத்தில் தன்னிலை மறந்து உல்லாசம்: விபரீதத்தில் முடிந்த விசித்திர ஆசை!

விமானத்தில் உடலுறவுக்கொள்ள வேண்டும் என்ற விசித்திர ஆசை, இளம் காதல் ஜோடியை விபரீதத்தில் கொண்டுவிட்டுள்ளது. 
 
காதலில் இருந்த இளம் ஜோடியினர் ஒருவர் விமானத்தில் உடலுறவுக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கேற்ப அயர்லாந்தில் இருந்து துருக்கிய நோக்கி செல்லும் விமானத்தை தேர்வு செய்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் என பல பயணிகள் பயனிக்கும் அந்த விமானத்தில் உடலுறவு மேற்கொள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். 
 
ஆனால், விமான பணிப்பெண்கள் ஆண் பெண் இருவரும் ஒரே நேரத்தில் கழிவறைய பயன்படுத்தக்கூடாது என மறுத்து தெரிவித்துள்ளனர். இதனால், அந்த இளம் ஜோடி தங்களின் இருக்கையில் உடலுறவு மேற்கொள்ள துவங்கினர். இதனை கண்ட சக பயணிகள் அவர்களை எச்சரித்துள்ளனர். 
இருப்பினும் அதை எதையுமே காதில் வாங்காம்ல் தன்னிலை மறந்து உல்லாசம் அனுபவித்தனர். விமான பணிப்பெண்கள் எவ்வளவு கூறியும் அவர்கள் கேட்பதாய் இல்லை. இதனால் வேறு வழி இல்லாமல், விமான பணிப்பெண் ஒருவர் இவர்களது கேவலமான செயலை திரையிட்டு மறைத்துள்ளார். 
 
அதோடு, போலீஸாருக்கும் புகார் கொடுக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் போது காத்திருந்த போலீஸார் அந்த ஜோடியை கைது செய்து அழைத்து சென்றனர்.