தொடர்புடைய செய்திகள்
- ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு சாப்பாடு இலவசம் ! மாநகராட்சி அறிவிப்பு
- பிசிசிஐ தலைவர் கங்குலி 2 வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை !
- சசிகலா விடுதலையை கோலாகலமாக்க அமமுகவினர் ஆயத்தம்!!
- உலகம் முழுவதும் அதிக ப்ளாஸ்டிக் மாசு! – டாப் லிஸ்டில் உள்ள நிறுவனங்கள்!
- காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்!
பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் பாதிப்பு: பேப்பர் பாட்டிலுக்கு மாறும் கோகோ கோலா
உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான கோகோ கோலா பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு அடைந்து தற்போது முன்மாதிரியாக பேப்பர் பாட்டிலை அறிமுகம் செய்ய இருக்கிறது
இது குறித்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் கோகோ-கோலா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகில் பலர் விரும்பி அருந்தும் குளிர்பானமாக கொக்கோகோலா சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது
பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக இயற்கை சுற்றுச்சூழல் படு பாதகமான சூழ்நிலையை ஏற்பட்டுள்ளதால் இனிமேல் பிளாஸ்டிக் பாட்டிலை பயன் படுத்த கூடாது என கோலா நிறுவனம் முடிவு செய்து உள்ளது.
இதனை அடுத்து மறுசுழற்சி செய்யப்பட்ட காகித பாட்டிலை உபயோகிக்க முடிவு செய்துள்ளது. இந்த காகித பாட்டில் 100% மறுசுழற்சி செய்யக் கூடியது என்பதும் பிளாஸ்டிக் இல்லாத பாட்டிலை உருவாக்குவதே தனது நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்றும் கோலா நிறுவனம் கூறியுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு எதிராக கோலா நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
அடுத்த கட்டுரையில்
