1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (23:03 IST)

ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு சாப்பாடு இலவசம் ! மாநகராட்சி அறிவிப்பு

பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பது பூமிக்கும் நமக்கும் தீங்கு என அரசு எத்தனையோ உத்தரவுகளைப் போட்டாலும்கூட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்தபாடில்லை..

இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்காகவுள்ள பிளாஸ்டிக் பொருட்களைக் குறைக்கும் நோக்கில் டெல்லி மாநகராட்சி சார்பில் ஒரு சிறப்பாக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் மாநகராட்சியின் சார்பில் carbage café –ல் உணவை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்காகவே அம்மா உணவகம் போன்று டெல்லியில் சுமார் 20க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.