தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் 50 ஆயிரத்தை தாண்டும் தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
- கங்கனா ரனாவத் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு!
- மகிழ்ச்சியான படங்கள் குறைந்துவிட்டன… பிருத்விராஜ் ஆதங்கம்!
- காவல்துறையின் மீது முதல்வரின் கவனம் தேவை… ஒபிஎஸ் அறிவுறுத்தல்!
- மும்பையில் தடுப்பூசி முகாம் என்று மோசடி…உஷார் மக்களே!
ஆனாலும் தைரியம்தான்.. வூகான் ஆய்வகத்திற்கு நோபல் பரிசு கேட்கும் சீனா!
கொரோனா வைரஸ் பரவல் குறித்து சர்ச்சைக்குள்ளான வூகான் ஆய்வகத்திற்கு சீனா நோபல் பரிசு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல கோடி மக்களை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது இல்லை என்றும், வூகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் சர்ச்சைக்கு உள்ளான வூகான் ஆய்வகத்திற்கு கொரோனா குறித்த ஆய்வுகளை மேற்கொண்டதற்காக நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய ஆய்வகத்திற்கு சீனா நோபல் பரிசு கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
