அரை நூற்றாண்டிற்கும் மேலான நீண்ட இடைவெளிக்கு பிறகு, நிலவை நோக்கிய மனிதகுலத்தின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை முடித்துக்கொண்டு ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். நாசாவின் ஓரியன் விண்கலம், நான்கு விண்வெளி வீரர்களுடன் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக வந்து இறங்கியது. ஏப்ரல் 1-ஆம் தேதி புளோரிடாவிலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம், சுமார் 10 நாட்கள் விண்வெளியில் பயணம் செய்து பல சாதனைகளை படைத்துள்ளது. ...