தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவோட பெரிய டீலிங் வைக்க போறேன்! – சஸ்பென்ஸ் செய்யும் ட்ரம்ப்
- அச்சுறுத்தும் கொரோனா; சொகுசுக் கப்பலில் இருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்..
- பூனைக்கும் இந்த கதியா?? கொரோனா மாஸ்க்குடன் சுத்தும் செல்லபிராணிகள்
- ஜப்பானில் சிக்கிய அமெரிக்கர்கள்: விமானத்தை கொண்டு வந்து மீட்ட அமெரிக்கா!
- தீ விபத்திலிருந்து மனைவியை மீட்ட கணவன்: தீயில் கருகி பலி!
உலகத்தை காப்பாற்ற 71 ஆயிரம் கோடி! – அள்ளிக்கொடுத்த அமேசான்!
Jeff Bezos
கடந்த சில ஆண்டுகளில் முன்பை விட அதிகமாக பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. பல விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பருவநிலை மாற்றத்தால் ஏற்பட கூடிய மாற்றங்கள் குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமேசான் நிறுவனரும், உலகின் முக்கிய பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோஸ் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள “போசஸ் எர்த் பண்ட்” என்ற நிதியகத்தை தொடங்கியுள்ளார். இதன்மூலம் பருவநிலை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வுகள், ஆய்வுகள் ஆகியவற்றுக்காக 10 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 71 ஆயிரம் கோடி) செலவிடப்பட உள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள ஜெப் பெசோஸ் ”போசஸ் எர்த் பண்ட் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பூமி நம் அனைவருக்கும் பொதுவானது. அதை நாம் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
