திங்கள், 29 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா: பரபரப்பு தகவல்!

இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இலங்கை பிரதமர் ராஜபக்ச நேற்று ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது என்பதும் அந்த தகவலுக்கு பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
புதிய அமைச்சர் நியமனம் செய்யப்படுவார்களா?  அல்லது இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுமா என்பது குறித்த தகவல் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை ஆளும் கட்சி பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது