1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. Duraimurugan answer for the minister Kadambur Raju

கடம்பூர் ராஜூவின் மெரீனா பிச்சை குறித்த கருத்துக்கு துரைமுருகன் பதிலடி

மெரினா
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்கியது அதிமுக அரசு போட்ட பிச்சை என்று இன்று காலை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். மெரினாவில் இடத்தை அரசு ஒதுக்கி இருந்தால் அது பிச்சை என்று கூறலாம். ஆனால் நீங்கள்தான் இடத்தை ஒதுக்கவே இல்லையே. நீதிமன்றத்தின் ஆணையினால் தானே கலைஞருக்கு மெரீனாவில் இடம் கிடைத்தது.

மேலும் ஒரு அமைச்சருக்கான தகுதி, கண்ணியத்தை மறந்து கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் பற்றி தெரியாத ஒரு அமைச்சர் இப்படி கண்ணியம் இழந்து கீழ்த்தரமாக பேசுவது சரியல்ல என்று துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பா.ஜ.க கட்சியின் கதவுகளை தி.மு.க தற்போது தட்டுகின்றது: தம்பித்துரை பேட்டி