வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 25 ஜூலை 2019 (17:19 IST)

இந்த மூன்று விஷயத்தை செஞ்சுட்டு செத்துப் போயிடனும் - ரஜினி பட இசையமைப்பாளர் ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்!

தமிழ் சினிமாவின் மிகசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 


 
அதையடுத்து விஜய் நடித்த பைரவா, ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா, தனுஷ் நடித்த கொடி ஆகிய படங்களு தொடர்ச்சியாக இசையமைத்து தமிழ் சினிமாவின் மிகசிறந்த இசையமைப்பாளர்களும் ஒருவராக தென்படுகிறார். 
 
அந்தவகையில் தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள A1 படத்திற்கு இசையமைத்துள்ளார் இவர் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்காக மாணவர்களின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் "உலகத்தை பசுமையாக மாற்ற வேண்டும்,  சுத்தமான தண்ணீர் கிடைக்க வழி செய்யவேண்டும்,  நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம் ஒழிக்கவேண்டும். இந்த மூன்று விஷயங்களை செய்துவிட்டு இறந்துவிட வேண்டும் என ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.