இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவான 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக இருந்தது.
ஆனால், இறுதிநேர குழப்பங்கள் காரணமாக, படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தங்கள் அபிமான நடிகர் பாலகிருஷ்ணாவின் படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனதற்கான முக்கிய காரணமாக, தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட நிதிச் சிக்கல்கள் இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva