வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 25 ஜூலை 2019 (15:43 IST)

சற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்த போலீசார்- கப்பலேறி போன மீராவின் மானம்!

மோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவுசெய்தனர்.  இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். 


 
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளிலிருந்தே அடுத்தடுத்து பல ரகளையை செய்துவந்த மீரா மிதுனை கண்டாலே வீட்டில் இருப்பவர்களுக்கு எரிச்சலாகிறது. இதனால் ஆளாளுக்கு அவருடன் சண்டையிட்டு வருகின்றனர். 
 
மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் குற்றாவாளிகளை எப்படி அனுமதித்தீர்கள் அவரை உடனே வெளியே அனுப்பவேண்டும் என்றெல்லாம் கண்டனங்கள் எழுந்தது.  காரணம், அவர் அழகி போட்டி நடத்துவதாக கூறி பத்துக்கும் மேற்பட்ட பெண்ககளிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரிவந்தது. இதனால் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரகசியமாக நுழைந்துவிட்டார். 
 
இந்நிலையில் சற்று முன் ஈவிபி பிலிம் சிட்டியில் உள்ள பிக்பாஸ்  வீட்டில் எழும்பூர் போலீசார் அதிரடியாக நுழைந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக மீரா மிதுனிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.