வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (12:10 IST)

இதை மட்டும் செஞ்சுடாதீங்க ப்ளீஸ்! இளசுகளை கெஞ்சும் யாஷிகா ஆனந்த்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பொது மக்கள் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிக்கு   மின்னல் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஏறபாடு செய்துள்ளது.


 
இதற்கான அறிமுக விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகை யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யாஷிகா ஆனந்த், இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானவர்கள் வேலை தான் முக்கியம் என நினைத்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பதில்லை. புத்தாண்டு தினத்தன்று கோபம், மன உளைச்சல் டென்சனை விட்டு புதிய உத்வேகத்துடன் தொடங்க வேண்டும். இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் குடிபோதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டுவதும் பைக் ரேஸ் போன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றார்..