1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
  4. saranya mohan shares her experience to act with vijay

எனக்காக விஜய் அழுதார் - நடிகை சரண்யா மோகன்

saranya mohan
தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அனுபவத்தை குறித்து நடிகை சரண்யா மோகன் பேட்டி ஒன்றில் கூறினார்.

அப்போது. " படத்தில் என்னுடைய கேரக்டர் இறந்த பிறகு விஜய் நிறைய எமோஷனலாகி நடித்தார். நிஜ வாழ்க்கையில் தன்னுடைய சொந்த தங்கையை விஜய் இழந்துவிட்ட வேதனை அதில் வெளிப்பட்டது. ஆனால், எனக்கு இந்த விஷயம் பிறகு தான் தெரியும். அவர் தன் ரசிகர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர். மேலும், தனக்கு விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
வடிவேல் பாலாஜி வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி!