ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By siva

நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஏற்கனவே பரோலில் வந்த நிலையில் அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியான நளினி ஏற்கனவே 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பரோல் இன்றுடன் முடிவடைகிறது
 
 இதனையடுத்து நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை அடுத்து மேலும் ஒரு மாதம் நளினிக்கு பரோல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது