தொடர்புடைய செய்திகள்
- ஒமிக்ரான் தொற்று: எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவைப்படும்?
- படுத்துக் கொண்டே விசாரணைக்கு ஆஜரான முன்னாள் காவல்துறை அதிகாரியை எச்சரித்த நீதிமன்றம்
- 24 மணி நேரத்தில் 7,495 பேருக்கு கொரோனா! - இந்திய நிலவரம்!!
- மாநாடு படம் ஒரே ஒருவருக்குதான் பிடிக்கவில்லை… மேடையில் கலாய்த்த வெங்கட்பிரபு!
- மறைந்த இயக்குனர் தாமிராவின் வெப் சீரிஸ் ரிலீஸுக்கு தயார்!
நளினிக்கு ஒரு மாத காலம் பரோல்… தமிழக அரசு முடிவு!
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன் நளினி உள்ளிட்டோரின் விடுதலை குறித்த சட்ட தீர்மானம் ஆளுநர் வசம் உள்ளது. அதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நளினிக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் அவருக்கு பரோல் வழங்கவேண்டும் என ஒரு மாதத்துக்கு முன்னர் அவரின் தாயார் விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கவேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்ற தமிழக அரசு வழக்கை முடித்து வைத்தது.
அடுத்த கட்டுரையில்
