வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (19:11 IST)

மகளிர் ஐபிஎல்.. 409 வீராங்கனைகள் தேர்வாகியுள்ளதாக தகவல்!

Women IPL
இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் விளையாட 409 வீராங்கனைகள் தேர்வாகியுள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 
 
மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாட 1525 வீராங்கனைகள் பதிவு செய்திருந்ததாகவும் அதில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இறுதிப் பட்டியலில் உள்ள 409 வீராங்கனைகள் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி ஏலம் விடப்படுவார்கள் என்றும் மகளிர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஐந்து அணிகள் இந்த வீராங்கனைகளை ஏலம் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 வீராங்கனைகளையும் அதிகபட்சமாக 20 வீராங்கனைகளையும் ஏலம் எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் மகளிர் ஐபிஎல் போட்டி தொடக்க உள்ளது என்பதும் இதில் 5 அணிகள் கலந்து கொள்ள உள்ளன என்பதை குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva