வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:06 IST)

சென்னையில் சர்வதேச கால்பந்து போட்டி.. தேதி அறிவிப்பு..!

football
சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச கால்பந்து போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய நேபாள பெண்கள் அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிப்ரவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
 
12 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற இருப்பதை அடுத்து கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் பெண்கள் கமிட்டி தலைவர் கூறும் போது இந்திய நேபாள பெண்கள் அணிகள் இடையே சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி நடைபெற உள்ளது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva