1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 14 மார்ச் 2020 (15:06 IST)

கொரேனாவுக்கு எதிராக உறுதியுடன் போராடுவோம். - விராட் கோலி !!

கொரேனாவுக்கு எதிராக உறுதியுடன் போராடுவோம். - விராட் கோலி !!
கொரோனா வைரஸுக்கு எதிராக உறுதியுடன் கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ஒருவர் பலியாகியுள்ளார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் என கூறியுள்ளார். 
 
உலகளவில் 123 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1,33,500 ஆக உயர்ந்துள்ளதாகவும், 5000 பேர் இதுவரை பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ( ஆர் எம் எஸ் மருத்துவமனையில் ) ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில் பதிவாகும் இரண்டாவது கொரோனா மரணம் இதுவாகும். இதற்கு முன்னர் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் மரணமடைந்தார்.
 
இந்தியாவில்  நேற்று மாலை வரை கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
 
கொரோவாவுக்கு எதிராக  உறுதியுடன் போராடுவோம்.அனைவரும் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வருமுன் காப்போம் என்பதை நினைவில் வைத்து உடல்நலத்தைப் பாதுக்காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.