வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (23:15 IST)

பிரபல கிரிக்கெட் வீரரை சாதிய ரீதியாக பேசிய யுவராஜ் சிங்....போலீஸார் வழக்குப் பதிவு

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மீது முன்னால் இந்திய அணு வீரர் யுவராஜ் சிங், சாதிய ரீதியிலான விமர்சனம் தெரிவித்ததால் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யுவராஜ் மற்றும் சாஹல் இருவரும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் உரையாடினர்.

அப்போது,  சாஹல் மீது யுவராஜ் சாதிய ரீதியிலான வார்த்தையைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அதில், வட இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட மக்களை பற்றி பேசியதாகத் தெரிகிறது.

இதனால் போலீஸார் யுவராஜ்சிங்  மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.