தொடர்புடைய செய்திகள்
- பிரேசில் கால்பந்து போட்டி: நடுவரை எட்டி உதைத்த வீரர் கைது!
- ஹோட்டலில் அனுமது மறுப்பு... ரோட்டு கடையில் பீட்சா சாப்பிட்ட பிரேசில் அதிபர்
- உணவகத்திற்குள் அனுமதிக்கப்படாத அதிபர்: சாலையில் நின்று பீட்சா சாப்பிட்டார்!
- தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டா மாடல் அழகி: காரணம் இதுதான்!
- பிரேசில் - அர்ஜெண்டினா அணிகள் இடையிலான கால்பந்து போட்டி நிறுத்தம்: என்ன காரணம்?
பிரபல விளையாட்டு வீரர் கைது ! போலீஸார் அதிரடி
பிரேசில் நாட்டில் நடந்த கால்பந்து போட்டியின்போது நடுவரை தலையால் முட்டிய வீரர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்டே என்ற பகுதியில் கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதில், சாபாலே என்ற அணியுடன் குவாரணி என்ற அணியும் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ரோட்ரிகோ கிரிவெல்லரே என்பவர் நடுவராக இருந்தார். அப்போது, வில்லியம் ரிபிரோவுக்கு அவர் ஃபீ கிக் கொடுக்க மறுத்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில்,கோபம் அடைந்த வில்லியம் ரிபிரோ நடுவரை தலையால் முட்டினார். இதில் நடுவர் கிழே சரிந்தார். உடனே அருகே இருந்த சக வீரர்கள் நடுவரை ஈட்டு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றனர். இதையடுத்து, வில்லியம் ரிபிரோ என்பவர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
