செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (18:18 IST)

நம்மை கிரிக்கெட்டால்தான் ஒன்றிணைக்க முடியும்! – பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்த கிரிக்கெட்டால் முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர்.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறவே இல்லை. உலக கோப்பைகளில் மோதி கொள்வது தவிர்த்து ஒருநாள் மற்றும் டி 20 ஆட்டங்களில் கூட இரண்டு அணிகளும் விளையாடுவதை தவிர்த்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இனைந்து விளையாட வேண்டியது அவசியம் என முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முஷ்டாக் அகமது கூறியுள்ளார். மேலும் ”இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் மீண்டும் நடைபெற வேண்டும். கிரிக்கெட்டால் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்படும் என்று நம்புகிறேன். இரண்டு நாடுகளும் இணைந்து விளையாட வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

ஆஷஸ் கோப்பை விளையாட்டு தொடரை விட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் சுவாரஸ்யமானது” என அவர் தெரிவித்துள்ளார்.