1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (21:59 IST)

168 ரன்கள் எடுத்தால் வெற்றி! மும்பையை தோற்கடிக்குமா ராஜஸ்தான்?

இன்று நடந்த முதல் போட்டியில் சென்னை அணி சூப்பர் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஜெய்ப்பூரில் இரண்டாவது போட்டி மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது.,
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் குவித்துள்ளது. யாதவ் 72 ரன்களும், இஷான்கான் 58  ரன்களும் எடுத்துள்ளனர்.
 
ராஜஸ்தான் தரப்பில் 19வது ஓவரை வீசிய ஆர்ச்சர் அந்த ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார். குல்கர்னி 2 விக்கெட்டுக்களையும் உனாகட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியினர் இன்னும் சில நிமிடங்களில் களமிறங்கவுள்ளனர்