வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (13:36 IST)

ராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வார்னே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற ராஜஸ்தான் அணியின் ஆலோசகர் ஷேர்ன் வார்னே ராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தையும் பெற்றுத்தந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷேர்ன் வார்னே, தற்கொழுது ராஜஸ்தான் அணிக்கு ஆலோசகராக உள்ளார்.
 
கடந்த 20 ந் தேதி சென்னை - ராஜஸ்தான் இடையே நடந்த போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்சிடம் படுதோல்வி அடைந்தது ராஜஸ்தான்.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் ஆலோசகரான  ஷேர்ன் வார்னே தனது டுவிட்டர் பதிவில்  ராஜஸ்தான் அணியின் மோசமான பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்கிற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். சரிவில் இருந்து மீள வீரர்கள் முயற்சித்து வருவதாகவும் இனி வரும் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.