1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:20 IST)

ராஜஸ்தான் அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்!

எஞ்சிய ஐபிஎல் தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரரான ஜோஸ் பட்லர் சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். அவருக்கு பதில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அதிரடி விக்கெட் கீப்பரான க்ளென் பிளிப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.