வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (07:10 IST)

கடைசி பந்தில் த்ரில் வெற்றி: ஆசிய கோப்பையை வென்றது இந்தியா

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால் இந்த ஆண்டும் ஆசிய கோப்பையின் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது

223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். இருப்பினும் முன்னணி பேட்ஸ்மேன்கள் தவான், ராயுடு, ஆகியோர் சொதப்பினர். . அதன்பின்னர் தினேஷ் கார்த்திக், தோனி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இலக்கை நோக்கி அணியை கொண்டு  சென்றனர்.

தினேஷ் கார்த்திக், தோனி இருவரும் அவுட்  ஆன பின்னர் ஜாதவ், ஜடேஜா, புவனேஷ்குமார் ஆகியோர் நிலைமை உணர்ந்து கவனமாக விளையாடினர். இந்த நிலையில் கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. முதல்பந்தில் குல்தீப் 1 ரன்னும், அடுத்த பந்தில் யாதவ் 2 ரன்னும் 3வது பந்தில் ரன் ஏதும் இல்லாமலும் 4வது பந்தில் ஒரு குல்தீப் யாதவ் ஒரு ரன்னும் எடுத்தனர். இதனால் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. 5 வது பந்தில் குல்தீப் ஒரு ரன் அடிக்க ஒரு பந்தில் ஒரு ரன் என்ற நிலையில் கடைசி பந்து ஜாதவ் காலில் பட்டு சென்றதால் ஒரு ரன் லெக்பை முறையில் கிடைத்தது. இதனால் இந்திய அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சதமடித்த வங்கதேச வீரர் லிடான் தாஸூக்கும், தொடர் நாயகனாக ஷிகர் தவானுக்கும் வழங்கப்பட்டது.