வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (16:55 IST)

டாஸ் வென்றது இந்தியா: ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது.

இன்று நடைபெறும் 14-ஆவது ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதுகின்றன. இதில் டாஸில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச முடிவு செய்துள்ளார்.

சென்ற போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, தவான்,புவனேஷ்வர் குமார் மற்றும் பூம்ரா போன்றோர் இந்த போட்டியில் மீணிடும் அணிக்குத் திரும்பியுள்ளனர். இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,

இந்தியா வீரர்கள்; ரோஹித் ஷர்மா, தவான், அம்பாத்தி ராயுடு, எம் எஸ் தோனி, தினேஷ் கார்த்தி, கேதார் ஜாதவ், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யஷ்வேந்திர சஹால், ஜாஸ்பிரித் பூம்ரா

வங்கதேச வீரர்கள்: லிடன் தாஸ், சௌமியா சர்கார், முகமது மிதுன், மோமினல் ஹக், முஷ்பிஹீர் ரஹீம், நஸ்முல் இஸ்லாம், மகமதுல்லாஹ், கையீஸ், மோர்ட்டஸா(கே), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஸுர் ரஹ்மான், மெஹிடி ஹசன்.