1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (10:09 IST)

இன்று வெளியாகிறது உலகக்கோப்பை இந்திய அணி – யாருக்கு வாய்ப்பு ?

உலகக்கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு இன்று மாலை மும்பையில் நடைபெற இருக்கிறது.

உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். நியுசிலாந்து , ஆஸ்திரேலிய போன்ற சில நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அற்சிவித்து விட்டன.

உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 23 ஆகும். இந்நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணிக்கான தேர்வு இன்று மாலை மும்பையில் நடக்க இருக்கிறது. தேர்வுக்குழுக் கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நேரில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஐபிஎல் போட்டியில் மும்பையில் நடக்கும் போட்டிக்காக விராட் கோஹ்லி தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளார்.

15 பேர் கொண்ட அணியில் கிட்டதட்ட 12 பேரின் இடம் உறுதியாகியுள்ளது. 4 ஆவது இடத்துக்கான வீரர்  மற்றும் இரண்டாவது ஆல் ரவுண்டருக்கான இடங்கள் மற்றும் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. அந்த இடங்களை நிரப்புவதற்காகவே தேர்வுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.