தொடர்புடைய செய்திகள்
- இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லையென்றால் அது பெரிய விஷயமே இல்லை – முன்னாள் வீரர் கருத்து!
- கோலியுடனான நட்பு எப்படி உள்ளது?... தோனி பகிர்ந்த தகவல்!
- இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி… வெற்றிக் கணக்கை தொடங்குமா இந்தியா?
- கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதால் மீனவர் மீது தாக்குதல்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!
- 14 பந்துகள் மீதமிருந்தும் தோற்றுவிட்டோம்… இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா வருத்தம்!
2வது ஒருநாள் கிரிக்கெட்: முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த சிராஜ்.. இலங்கை ஸ்கோர்..!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
அந்த அணி சற்று முன் வரை 44 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர் நிசாங்கா, ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிராஜ் பந்தில் அவுட் ஆனார். இதனையடுத்து பெர்னாண்டோ 40 ரன்களும், மெண்டிஸ் 30 ரன்களும் எடுத்துள்ளனர்.
இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அக்சர் பட்டேல், சிராஜ் மற்றும் குல்திப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்
முன்னதாக இந்தியா இலங்கை இடையே நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எந்த அணிக்கும் வெற்றி தோல்வி இன்றைய சமனில் முடிந்த நிலையில் இன்றைய போட்டியின் முடிவு தொடரை வெல்ல முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
