1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (21:25 IST)

மேற்கு இந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!

3 போட்டிகள் கொட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா அணி.

 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பிய மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பியறது.
 
முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
 
இதனால் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுடனா தொடரை 3-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.