1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 நவம்பர் 2021 (10:24 IST)

ஆட்டம் காணும் ஹர்திக் பாண்ட்யாவின் இடம்… டி 20 போட்டிகளில் கெட் அவுட்டா?

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தற்போது டி 20 ஆட்டத்தில் தனது இடத்தின் நிரந்தரத் தன்மையை இழக்க ஆரம்பித்துள்ளார்.

நவம்பர் 17 ஆம் தேதி இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டி தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா ஓய்வு என்ற பெயரில் இந்த தொடரில் ஓய்வு என்று உட்காரவைக்கப்பட்டு இருந்தாலும், அவரின் சமீபகால பார்ம் அவ்ட்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் டி 20 போட்டிகளில் அவரின் நிரந்தர இடம் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஹர்திக் பாண்ட்யா சமீபகாலமாக பந்துவீசாமல் இருப்பதுவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.