1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2023 (19:08 IST)

டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா .. என்ன முடிவெடுத்தார் தெரியுமா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவிருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. 
 
இதில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
புள்ளி பட்டியலில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு அணிகளுமே நான்கு புள்ளிகள் எடுத்துள்ளது. இருப்பினும் குஜராத் நான்காவது இடத்திலும் பஞ்சாப் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி மூன்றாவது இடத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva