1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Goalkeeper ran with underware in ground

மைதானத்தில் ரசிகர்கள் மீது ட்ரவுசரை தூக்கி வீசிய கோல் கீப்பர்!!

மைதானம்
கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மீது ட்ரவுசரை கழட்டி வீசிவிட்டு உள்ளாடையுடன் நின்ற கோல் கீப்பர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
ஐரோப்பிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான பார்சிலோனாவும், இத்தாலியின் முன்னணி கிளப் அணியான யுவான்டஸ் அணியும் மோதின. 
 
இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆனாலும், பார்சிலோனா அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. வழக்கமாக போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் ஒவ்வொருக்கொருவர் கட்டிப்பிடித்து, தாங்கள் அணிந்திருக்கும் ஜெர்சியை ரசிகர்கள் நோக்கி வீசிவது வழக்கமானது. 
 
அந்த வகையில், யுவுான்டஸ் கேப்டனும், இத்தாலி அணியின் முன்னாள் தலைசிறந்த கோல் கீப்பரான பஃபன் திடீரென தன்னுடைய ட்ரவுசரை கழற்றி கோல் கம்பத்திற்கு பின்னாள் இருந்த ரசிகரை நோக்கி வீசினார்.
 
பின்னர் உள்ளாடையுடன் வேகமாக யுவான்டஸ் வீரர்கள் அறையை நோக்கி ஓடியுள்ளார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை அணிக்கு முதல் வெற்றி