1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:44 IST)

டெத் ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் மோசம்: கவாஸ்கர் விமர்சனம்

டெத் ஓவர்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் மிகவும் மோசமாக பந்து வீசுகின்றனர் என கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார் 
 
இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தாலும் சில விமர்சனங்களை பெற்று வருகிறது
 
 குறிப்பாக நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் கடைசி 5 ஓவர்களில் 80 ரன்கள் விட்டுக் கொடுத்தனர் 
 
இதுகுறித்து கூறிய கவாஸ்கர் டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தால் இந்திய அணிக்கு தலைவலி ஏற்படலாம் என்றும் அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்