வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 12 ஜூன் 2018 (17:40 IST)

5 விநாடிகள் மட்டுமே மீட்டிங்: சிஎஸ்கே குறித்து தோனி!

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணிக்கு இது மறக்க முடியாத வெற்றியாக அமைந்தது. 
 
சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி, சிஎஸ்கே அணியை பற்றியும் வீரர்களை பற்றியும் பேசினார். அவர் கூறியது பின்வருமாறு. இறுதிப் போட்டி தருணத்தில் ஐபிஎல் தொடர் முழுதும் நாங்கள் எப்படி எங்களை களத்தில் நடத்தி கொண்டோம் என்பது பற்றி மிகவும் ரிலாக்ஸாகவே இருந்தோம். 
 
ஒவ்வொரு வீரரின் பங்கு மற்றும் பொறுப்புகள் தெளிவாகவே இருந்தது. ஒரு அணியின் கேப்டன், பயிற்சியாளர் என்பதற்காக வீரர்களைக் கூட்டி ஏதாவது கூறியே ஆக வேண்டும் என்ற அவசியமில்லை. 
 
இறுதிப் போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கூட்டம் 5 விநாடிகள் நடந்திருந்தால் அது பெரிது. போய் கோப்பையை வெல்லுங்கள் பாய்ஸ் என்றார் பிளெமிங் வீரர்கள் வென்றார்கள் என்று கூல்ளாக பதிலளித்தார்.