வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (12:13 IST)

கோஹ்லிக்கு ஓய்வு: ரோஹித் சர்மா தலைமையில் 5வது டி20

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுப்பதால் ரோகித் சர்மா கேப்டன் ஆகிறார். அதேபோல் ஏற்கனவே நான்காவது டி20 போட்டியில் காயம் காரணமாக விலகியிருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்த போட்டியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த அணிக்கு செளதி தலைமை ஏற்கிறார்.
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு:
 
இந்தியா: கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சாஹல், நவ்தீப் சயினி, பும்ரா,
 
நியூசிலாந்து: குப்தில், முன்ரோ, டிம் செய்ப்ரிட், டெய்லர், டாம் புரூஸ், மிட்செல், சாண்ட்னர், இஷ் ஷோதி, டிம் ஷோதி, ஹமிஷ் பென்னட், ஸ்காட் குஜ்ஜிலின்