தொடர்புடைய செய்திகள்
- ஜாதவை தூக்கிட்டு ராயுடுவை போடுங்க! கலகலக்கும் சிஎஸ்கே –நைட் ரைடர்ஸ் ப்ளேயர்ஸ் லிஸ்ட்!
- முதல் ஆறு போட்டிகளில் மும்பை அணியின் ஆச்சரியமான ஒற்றுமை!
- ஐபிஎல்-2020; ராஜஸ்தான் படுதோல்வி : மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !
- ஐபிஎல் -2020; டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு
- சி எஸ் கே அணிக்கு பின்னடைவு… முக்கிய வீரருக்கு காயம்!
புது பந்த என் கையில கொடுங்கப்பா… கேட்டு வாங்கி சொல்லி அடித்த கில்லி!
நேற்று ராஜஸ்தான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் துருப்புச் சீட்டுகளில் ஒன்றாக கருதப்படுபவர் பூம்ரா. ஆனால் இந்த சீசன் ஆரம்பத்தில் அவர் பந்துவீச்சில் அதிக ரன்கள் கொடுத்தார். இது அவர் மேலான அழுத்தத்தை அதிகமாக்கியது. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது அவரை 10 ஓவர்களுக்கு மேல் பந்து வீச அழைத்தது. அப்போது பந்து பழையதாகி விடுவதால் அவரால் ஸ்விங் செய்ய முடியவில்லை.
இந்நிலையி நேற்றைய போட்டியில் புதிய பந்தில் வீசுகிறேன் என தானாக கேட்டு வாங்கி பந்து வீசினார். நேற்றைய போட்டியில் வெறும் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் தன் பார்மை அவர் ரசிகர்களுக்குக் காட்டியுள்ளார்.
