வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (07:32 IST)

நாளை அகமதாபாத்தில் 4வது டெஸ்ட்: தொடரை வெல்லுமா இந்தியா?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடி வருகிறது என்பதும் இதுவரை நடந்து முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் இந்தியாவும் ஒன்றில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாளை அகமதாபாத் மைதானத்தில் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வென்றால் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்று விடும். இங்கிலாந்து வென்றால் 2-2 என்று தொடர் சமன் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே அகமதாபாத் மைதானம் சுழல்பந்துக்கு சாதகமாக இருப்பதால் சுழல்பந்து வீச்சாளர்கள் இரு அணிகளும் அதிகமாக களமிறக்கப்படுவார்கள் என தெரிகிறது. மேலும் நாளை போட்டி தொடங்க உள்ளது எடுத்து கடந்த இரண்டு நாட்களாக இரு அணி வீரர்களும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.