1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ryan parag will lead RR in first three matches

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

IPL 2025
அடுத்தடுத்து இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடிய நிலையில் அடுத்த 2 மாதங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளது. 22ம் தேதி 18 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் தங்கள் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக அந்த அணி விளையாடும் முதல் மூன்று போட்டிகளில் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட உள்ளார்.

அதனால் அந்த மூன்று போட்டிகளிலும் இளம் வீரர் ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!