1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (19:39 IST)

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் கொண்டு வரப்பட்ட யூடியூபர் மதன்!

யூடியூபர் மதன் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் இளம் பெண்களை பாலியல் வன்முறைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் திடீரென யூடியூபர் மதன் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று காலை அவரை தர்மபுரியில் போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து அவரை சென்னைக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகள் நடைபெற்றது என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி யூடியூபர் மதன் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் கொண்டுவரப்பட்டார். ஏற்கனவே யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மதனை போலீசாரும் தீவிரமாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர் என்பதும் அதன் பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.