திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (11:52 IST)

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டி செல்வராஜ் மறைவு - கலைஞர்கள் இரங்கல் !

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான டி செல்வராஜ் நேற்று மாலை அவரது இல்லத்தில் மறைந்தார்.
 

திருநெல்வேலியில் பிறந்த எழுத்தாளர் டி செல்வராஜ் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் மூலதனம் மலரும் சருகும் அக்னிகுண்டம் தேநீர் மற்றும் தோல் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவரது தேனீர் நாவல் இயக்குனர் ஜெயபாரதி அவர்களால் ஊமை ஜனங்கள் என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இவரது தோல் நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருதும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தை தோற்றுவித்தவர்களுள் இவரும் ஒருவர்.  வயது மூப்பு காரணமாக சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்த இவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.  அவரது மறைவிற்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.