தொடர்புடைய செய்திகள்
- முழுமையான பட்ஜெட் தாக்கல்! நேரடி ஒளிபரப்பு! – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
- மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: கிராம் ரூ.5100ஐ தாண்டியதால் அதிர்ச்சி!
- சலார் முன்னணி ஹீரோ நடிப்பதை உறுதி செய்த பிரபாஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்!
- சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ரத்து..! – திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
- நோய்களை விரட்டும் இயற்கை வழிமுறைகள்
அடுத்த இரு தினங்கள் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட்!
இன்று தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தகவல்.
வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் திடீரென வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தமிழகத்தில் கரை கடந்தது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
முக்கியமாக டெல்டா பகுதிகளான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதோடு சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
