1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (09:14 IST)

சலார் முன்னணி ஹீரோ நடிப்பதை உறுதி செய்த பிரபாஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் நடிக்கும் திரைப்படமான சலாரில் பிருத்விராஜ் நடிப்பதை உறுதியுள்ளார் பிரபாஸ்.

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.  சூப்பர் ஸ்டார் அளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் என்ன என்ன என்று சினிமாத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதையடுத்து கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் ராஜமன்னார் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தின்  இரண்டு கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் ராதே ஷ்யாம் படத்தின் ப்ரஸ் மீட்டில் கலந்துகொண்ட பிரபாஸ் சலார் திரைப்படத்தில் பிருத்விராஜ் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவி வந்த நிலையில் இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.