1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Warrant issue against thirumavalavan

திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்.. மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு

பிடிவாரண்ட்
2003ம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வழக்கில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த 2003 ஆம் ஆண்டு மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து பேரணி நடத்தினார். இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது தொடர்பாக மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் திருமாவளவன் ஆஜராகவில்லை என்பதை அடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வழக்கு தொடர்பாக திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர் மனுதாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து பிடிவாரண்ட் பிறப்பித்து ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு நீதிபதி இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளார். அன்றைய தினம் திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் முழு பொறுப்பு: தமிழக அரசு பதில் மனு..!