1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (07:47 IST)

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் அந்த ஆலையில் பணி செய்து கொண்டிருந்த மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள் என்பதும் மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள் என்பதையும் பார்த்தோம். 
 
மேலும் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான குடும்பத்தினர்களுக்கு ரூபாய் 3 லட்சம் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன தீ காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனியசாமி என்பவர் உயிரிழந்தார் என்றும் மேலும் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.